2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி வழங்குதல் - 2023 - 2023 ஆம் ஆண்டிற்கான சீருடைத்துணி 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவணைக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் மக்கள் சீனக் குடியரசுக்கு செய்த கோரிக்கைக்கு அமைவாக 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைச் சீருடைத்துணித் தேவையின் ஒருபகுதியை கொடையாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சீன அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இந்த கொடைக்கு மேலதிகமாக தேவைப்படும் மீதி துணித் தொகையை உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |