2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை சமகால தேவைகளுக்கு ஏற்ப திருத்துதல் - 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 1968‑04‑04 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலொன்றின் மூலம் அரசாங்க மரக்கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுத்தாபனத்தின் பணிகளை சமகாலத் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்தும் தேவை இனங்காணப் பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க மரக்கூட்டுக் கூட்டுத்தாபனத்தின் விடயநோக்கெல்லையை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்துவதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |