2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரித்தல் - ஊடகத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் தொழில் நிலையை உயர்த்தும் நோக்கில் 'பட்டயம் பெற்ற ஊடகவியாளர்களின் நிறுவனம்' என்பதை தாபிக்கும் பொருட்டு 2021‑10‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய பணிகளை செய்யும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக் குழுவினால் இந்த நிறுவனத்தை தாபிப்பதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வரைவினை அடிப்படையாகக் கொண்டு சட்டவரைநர் திணைக்களத்தின் ஊடாக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கும் இதற்கு முன்னர் பிரேரிக்கப்பட்ட 'பட்டயம் பெற்ற ஊடகவியாளர்களின் நிறுவனம்' என்பதற்குப் பதிலாக 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடக தொழில்சார்பாளர்களின் நிறுவனம்' என திருத்துவதற்குமாக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |