2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் சார்பில் இலங்கை மற்றும் இந்திய தபால் அதிகாரிகளினால் கூட்டாக முத்திரை வௌியிடுதல் - 2022 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டத்திற்கு ஒருங்கிணைவாக 'சனநாயகம்' என்னும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளினதும் 'பாராளுமன்றத்தை' பிரதிபலிக்கும் விதத்தில் இந்நாட்டு தபால் திணைக்களத்தினாலும் இந்திய தபால் திணைக்களத்தினாலும் ஞாபகார்த்த முத்திரைகள் இரண்டு வீதம் வௌியிடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இரு நாடுகளினாலும் வௌியிடப்படும் முத்திரைகளிலிருந்து 3,000 முத்திரை தொகுதிகள் வீதமும் 5,000 ஞாபகார்த்த பத்திரங்கள் வீதமும் 2,000 ஆரம்ப தின கடித உறைகள் வீதமும் பரிமாறிக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி இரு நாடுகளினதும் தபால் திணைக்களங்களுக்கிடையில் கூட்டாக முத்திரை வௌியிடும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |