2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை நாவலபிட்டி அல்-சபா ஆரம்ப பாடசாலைக்கு குறித்தொதுக்குதல் - 1,000 இரண்டாம் நிலை பாடசாலைகளை மீள் நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாவலபிட்டி அல்-சபா ஆரம்ப பாடசாலை 2013 ஆம் ஆண்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்குத் தேவையான கட்டட வசதி இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலபிட்டி புகையிரத நிலையத்திற்குரிய களஞ்சியசாலையொன்றின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த கட்டடமானது போதுமானதாக இல்லாமையினால் நிரந்தர கட்டடங்களை நிர்மாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலபிட்டி கொடமுதுன கரஹந்துன்கலயில் அமைந்துள்ள சுமார் 02 ஏக்கர் காணித்துண்டை இந்த பாடசாலைக்கு சட்டபூர்வமாக ஒதுக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினாலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |