• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளிலான ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளிலான ஒத்துழைப்பின் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்கு முன்னாள் திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு சார்பில் 2021‑06‑21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.