2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல் - தற்போது நாட்டில் நிலவும் கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியான பெற்றோலிய உற்பத்தி பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோலிய இறக்குமதியின் பொருட்டு மேலும் போட்டிகரமான தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கு 2022 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க சட்டவரைநரினால் உரிய சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |