2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யப்பான் மொழி தேர்ச்சியினை பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பித்தல் - இலங்கை அரசாங்கத்திற்கும் யப்பான் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையர்களுக்கு சேவையில் உள்ளபோதே தொழினுட்ப பயிலுநர்களாகவும் விசேட திறமைமிக்க தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் 14 துறைகளில் தொழில் வாய்ப்புகளுக்காகவும் விண்ணப்பிப்பதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதன் பொருட்டு யப்பான் மொழி தேர்ச்சி அத்தியாவசிய தகைமையொன்றாவதோடு, கட்டம் கட்டமாக நடாத்தப்படும் பரீட்சைகளில் உரிய தகைமைகளைப் பெற்றுக் கொள்தலும் வேண்டும். எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்குள் விசேட திறமை தொழில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யப்பான் சுமார் 345,000 ஊழியர்களை தொழில்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இலங்கை உட்பட இதன் பொருட்டு ஏழு (07) நாடுகளுடன் யப்பான் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டுள்ள தொழினுட்ப பாடத்திட்டத்தின் கீழ் யப்பான் மொழி மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கும் யப்பானில் தொழில் வாய்ப்பினை குறியிலக்காகக் கொண்டு கவனிப்பாளர் சேவை, உபசரிப்பு சேவை, கட்டட சுத்திகரிப்பு, கமத்தொழில் நடவடிக்கைகள், மோட்டார் வாகன தொழினுட்பவியலர் அல்லது மின்சார மின்னணு தொழினுட்பவியலர் போன்ற துறைகளில் திறன்களை அபிவிருத்தி செய்வதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |