• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயர் பணியாளர்களுக்கு சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல்
- நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வொன்றாக புலம்பெயர் பணியாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் அனுப்பீடுகளை அதிகரிப்பதற்கு வழங்கப்படவேண்டிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு 2022‑06‑27 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாட்டிற்கு சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பப்படும் வௌிநாட்டு நிதியின் அளவினை அடிப்படையாகக் கொண்டு உரிய புலம்பெயர் பணியாளர் நாட்டிற்கு வரும்போது மேலதிக தீர்வை சலுகை கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் மின்சாரத்தினால் இயக்கப்படும் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு குறித்த புலம்பெயர் பணியாளருக்கு வசதிகளை செய்வதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.