• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- அந்நிய செலாவணி விகிதாசாரம் குறைவடைந்தமை, பணவீக்கம் அதிகரித்தமை அதேபோன்று எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் அன்றாட வாழ்கையை நடாத்திச் செல்தல் அதேபோன்று கமத்தொழில், போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளுக்கு கடும் தாக்கத்தினை ஏற்படுத்தி மக்களை கடும் நெருக்கடி நிலைமைக்கு ஆளாக்கியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் 2022 ஆம் ஆண்டு சார்பில் புதிய வரவுசெலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு 2022 யூன் மாதம் 06 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொருளாதார நிலைப்படுத்தல் சார்பில் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் வரி மறுசீரமைப்பினை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய சகல விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2022 ஆம் ஆண்டு சார்பில் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளதும் சட்டமா அதிபரினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுமான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.