2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விமான விபத்துக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை நினைவுகூரும் சருவதேச தினம் - இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை - சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் நிருவாக சபையினால் அதன் 224 ஆவது கூட்டத் தொடரின் 5 ஆவது கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியை விமான விபத்துக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை நினைவுகூரும் சருவதேச தினமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையிலும் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியை விமான விபத்துக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை நினைவுகூரும் தினமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |