• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பணிப்பாளருக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் தொகுதி அலுவலகமொன்றைத் தாபித்தல்
- ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பணிப்பாளர் சபையானது வதிவற்ற பணிப்பாளர்களைக் கொண்டுள்ளதோடு, இந்த பணிப்பாளர்கள் நாடொன்று அல்லது பல நாடுகளைச் சேர்ந்த 12தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வங்கியின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரான இலங்கையானது வங்கியின் 11 ஆவது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தோனேஷியா இந்த தொகுதியின் பிரதான பங்குதாரர் ஆவதோடு, உரிமையாளராவதோடு, இலங்கை கம்போடியா, மியன்மார், லாவோஸ் மற்றும் கிழக்குத் தீமோர் என்பன ஏனைய உறுப்பு நாடுகளாகும். இந்த நாடுகளுக்கிடையில் 2016 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக குறித்த தொகுதிக்குரிய பணிப்பாளர் பதவி மற்றும் மாற்று பணிப்பாளர் பதவி சுழற்சி முறைக்கு அமைவாக மரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதற்கிணங்க 2022-2024 வரையிலான காலப்பகுதியில் இந்த தொகுதிக்கான தலைமை தாங்குவதற்கும் பணிப்பாளர் பதவியை வகிப்பதற்கும் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இதன் பொருட்டு திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.. இலங்கைக்கு இந்த சந்தர்ப்பத்தில் இப்பதவியானது கிடைக்கப்பெற்றுள்ளமை மிக முக்கியமானதாவதோடு, இந்த வங்கியின் பணிப்பாளர் சபை வதிவற்ற பணிப்பாளர் சபையொன்றாக செயலாற்றுகின்றமையினால் பணிப்பாளர் சபை மட்டத்திலான பணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்யவேண்டியுள்ளது. இதற்கிணங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் தொகுதி அலுவலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.