2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனிதவள அபிவிருத்திக்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - அரசாங்க துறை நிறைவேற்று தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழங்களில் பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கத்தினால் மனிதவள அபிவிருத்திக்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமானது 2010 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்பதற்கு 195 வாய்ப்புகளும் கலாநிதி பட்டப் பாடநெறிகளை கற்பதற்கு 10 வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு சார்பில் 282 மில்லியன் யப்பானிய யென்கள் (அண்ணளவாக 761 மில்லியன் ரூபா) கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிமாறல் கடிதங் களில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |