• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை
- வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் துறைசார்ந்த நீதிமன்ற ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் 2014 ஆம் ஆண்டில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கையின் 5(1) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளை இரு நாடுகளினதும் சட்ட முறைமைக்கு ஏற்ற விதத்தில் மீண்டும் திருத்தியமைத்து இந்த வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.