2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்தோனேஷியா குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான அபிப்பிராயக் கடிதத்தினை கைச்சாத்திடுதல் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்தோனேஷியா குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு பொறிமுறையொன்றினைத் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான இணக்கப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் அபிப்பிராயக் கடிதமொன்றை கைச்சாத்திடுவதற்கு இந்தோனேஷியா அரசாங்கத்தினால் பிரேரிக்கப் பட்டுள்ளதோடு, வரைவு அபிப்பிராயக் கடிதத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க இந்த அபிப்பிராயக் கடிதத்தில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |