2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்தம் - அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்தம் தொடர்பில் ஆரம்ப வரைவுக்கு 2022‑06‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்தம் வரையப்பட்டுள்ளதோடு, இந்த வரைவானது அரசியலமைப்புக்கு ஒத்தியல்கின்றதென சட்டவரைநரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாவது திருத்த வரைவினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |