2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - காணி தொடர்பிலான முறைக்கேடுகள் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு சட்டங்களை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2021 யூலை மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |