2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் - காணி மோசடிகள் சம்பந்தமான சட்டவிரோத நடவடிககைகளை தடுக்கும் நோக்கில் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தைத் திருத்தும் பொருட்டு 2021 யூலை மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நொத்தாரிஸ் ஆலோசனைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு பதிவாளர் அதிபதியின் கருத்துகளையும் பெற்று சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |