2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல் - இலங்கையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றம் வரைவிலக்கணப்படுத்தப்படாததன் காரணமாக இத்தகைய வழக்குகளை விசாரிப்பதற்கும் மற்றும் தீர்ப்பளிப்பதற்கும் தௌிவான மற்றும் ஒரே மாதிரியான நடவடிக்கை பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக நீதியினை நிலைநாட்டும் செயற்பாட்டிற்கு தலையிடும் வரையறைகள் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்தின் கீழான வரையறைகள் எவ்வளவு என்பது பற்றி தெரிந்துகொள்வது கடினமாகியுள்ளது. அதேபோன்று நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பில் அண்மைக்காலமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளான வழக்குகள் பற்றி பரிசீலனை செய்யும் போது இது தொடர்பிலுள்ள சட்டத்தினை மீள பரிசீலனை செய்வது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து இலங்கை சட்ட ஆணைக்குழுவினால் ஆரம்ப வரைவொன்று வரையப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமொன்றினை விதிப்பதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |