2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல் - பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவையான சிறுவர்கள் தொடர்புபட்ட வழக்கு விசாரணைக்கு அல்லது சட்டத்தை மீறுகின்ற சிறுவர் ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு நீதிமன்ற அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தும் மற்றும் சிறுவர்கள் சம்பந்தமாக வேறுவிதத்தில் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றங்களை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் சிறுவர் (நீதிமன்றம் சார்ந்த பாதுகாப்பு) பற்றிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2015 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சட்டமூலத்தை இரண்டு நிபுணர்கள் குழுக்களினால் ஆராய்ந்து மேலும் பிரேரிப்புகளை சமர்ப்பித்துள்ளன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்திற்கு குறித்த இந்த பிரேரிப்புகளையும் உள்வாங்கி இறுதி சட்டமூலத்தினை தயாரிக்குமாறு சட்டவரைநரருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |