2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் மூலம் 18 வயதிற்கு குறைந்த ஒருவர் சிறுவர் ஒருவராக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த சமவாயத்திற்கு அமைவாக உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி சிறுவர் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு 2020 செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் பிரகாரம் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்ததமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |