• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல்
- அடிப்படை சருவதேச ஒழுங்குறுத்துகை தேவைகளை உறுதிசெய்து கொண்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாட்டுப் பணிகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் COVID - 19 தொற்று நிலைமை காரணமாக அதன் செயற்பாட்டு பணிகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இந்த விமான நிலையத்திலிருந்து தென் இந்திய பயண முடிவிடம் வரை வாடகை விமானப் பயணங்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட விமான பயணங்களை செயற்படுத்துவதற்கு சருவதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தாபிக்கப்பட்டுள்ள விமான கம்பனிகள் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதற்கிணங்க, யாழ்ப்பாணம் சருவதேச விமான நிலையத்தின் சருவதேச செயற்பாடுகளை 2022 யூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.