• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தம்
- அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று சனாதிபதி முறைக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் தற்போது நாட்டில் கடும் முரண்பாடான நிலைமை எழுந்துள்ளமையினால், அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தில் நிலவிய சாதகமான அம்சங்களை மீள அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையின் கீழ் தற்போது நாடு முகங்கொடுத்து'ள்ள நெருக்கடியான நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்று சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் குறிப்பிட்ட அதிகார மாற்றங்களை உருவாக்குவதற்கு இயலுமாகும் வகையில் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கூட்டாக பொறுப்புக்கூறும் அமைச்சரவை மற்றும் அரசியலமைப்பு பேரவை என்பவற்றுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை கையளிக்கும் விதத்தில் அரசியலமைப்பினைத் திருத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைவுக்கு அமைச்சரவையின் கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.