2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுரம் அஞ்சல் அலுவலக மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி வீடமைப்பு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் - நகர குடியிருப்பு அதிகாரசபையினால் அநுராதபுரம் அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள 99 பேர்ச்சர்ஸ் காணியில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. காணியின் தற்போதைய பெறுமதிக்கு ஏற்ற விதத்தில் புதிய அஞ்சல் அலுவலக மனையிடமொன்றை அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு உட்பட்டு, உரிய காணியை விடுவிப்பதற்கு இந்த திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த காணித் துண்டை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இறையிலி கொடையொன்றாக நகர குடியிருப்பு அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் தேசிய அல்லது சருவதேச போட்டிகரமான நடவடிக்கை முறையினைப் பின்பற்றி விருப்பக் கோரல்களைக் கோரி பொருத்தமான முதலீட்டாளரொருவரை தெரிவு செய்து அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து'வதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |