2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முத்துராஜாவெலவில் அமைந்துள்ள 10 ஏக்கர் கொண்ட காணித் துண்டினை இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்குதல் - முத்துராஜாவெலவில் அமைந்துள்ள யுகதனவி மின் நிலையத்திற்கு அருகாமையில் 10 ஏக்கர் கொண்ட காணித் துண்டினை 300 மெகாவொட் LNG மின் நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் பொருட்டு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்தக் காணித் துண்டினை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க மதிப்பீட்டாளரினால் மதிப்பிடப்பட்டுள்ள சந்தை பெறுமதியை அறவிட்டு இதனை இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |