2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயனுள்ள பணியொன்றில் ஈடுபடுவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வௌிநாட்டு லீவு வழங்குதல் - கல்வி அல்லது வௌிநாட்டு தொழில் சார்பில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களுடைய சேவைக் காலத்தில் ஆகக்கூடுதலாக ஐந்து (05) வருட காலம் சம்பளமற்ற லீவு பெற்றுக் கொள்வதற்கு தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய சாத்தியம் உள்ளது. ஆயினும், இந்தக் காலப்பகுதியானது ஓய்வூதிய கணிப்பீட்டின் போது கவனத்திற் கொள்ளப்படாமை, சேவை மூப்புக்கு தாக்கத்தினை செலுத்துகின்றமை உட்பட பிற நிபந்தனைகள் காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ்வாறு லீவு பெற்றுக் கொள்வதன்பால் அவ்வளவு ஊக்கம் செலுத்துவதில்லை. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வௌிநாடொன்றில் தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயனுள்ள பணியொன்றில் ஈடுபடுவதற்கு அவர்களுடைய சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பேற்படாத விதத்தில் ஐந்து (05) வருட காலம் சம்பளமற்ற வௌிநாட்டு லீவு பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளைத் திருத்தி உரிய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வௌியிடும் பொருட்டு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |