2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் - 2022 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பகள் மூலம் சமூக பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரிப்பானது பாராளு மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆண்டொன்றில் மொத்த வருமானம் 120 மில்லியன் ரூபாவை விஞ்சும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், தொகை வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் சார்பில் 2.5 சதவீத விகிதாசாரத்தின் கீழ் புதிய வரியொன்றாக சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியினை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்ப தற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |