2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் - 2023 - பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் பொருட்டு இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைக் கிளை, இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு உட்பட பல்வேறுபட்ட தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அதேபோன்று இது தொடர்பிலுள்ள நீதிமன்ற தீர்ப்பு என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையானது கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, \2023 ஆம் ஆண்டிலிருந்து முன்னோக்கியதாக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக குறித்த திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளை ஏற்புடைத்தாக்கிக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. அங்கீகாரம் வழங்கப்பட்டது. |