2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டத்தைத் திருத்துதல் - நாட்டில் எழுந்துள்ள கடினமான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்த நோக்கங்களுக்கு மேலதிகமாக வேறு அத்தியாவசிய நோக்கங்களுக்கான செலவுகளை ஏற்கவேண்டி நேரிட்டுள்ளமை அதேபோன்று 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டம் அங்கீகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இருந்த அமைச்சுக்களின் கட்டமைப்பு தற்போது கணிசமான அளவு மாற்றமடைந்துள்ளதன் காரணமாக 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்திற்குப் பதிலாக திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |