2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2022/2023 பெரும் போகத்தில் நெற் பயிர்ச்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன பசளை கொள்வனவு செய்தல் - 2022/2023 பெரும் போகத்தில் 800,000 ஹெக்டயாரில் நெல் பயிர்ச்செய்கைக்குத் எதிர்பார்க்கப்படுவதோடு, இதற்குத் தேவையான பசளையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது. 2022/2023 பெரும் போகத்தில் நெற் பயிர்ச்செய்கைக்காக 150,000 மெற்றிக்தொன் யூரியா, 45,000 மெற்றிக்தொன் Murate of Potash மற்றும் 36,000 மெற்றிக்தொன் Triple Super Phosphate தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய பசளை அளவுகளை வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி என்பவற்றின் ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |