2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பித்தல் - தற்போதைய பாதகமான பொருளாதார சூழ்நிலை காரணமாக பொதுமக்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள இன்னல்களை இயலுமான வரை குறைப்பதற்கு சமுர்த்தி பயனாளிகளுக்கு, பெருந்தோட்ட மக்களுக்கு, ஓய்வூதியகாரர்களுக்கு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கத்தினால் சலுகை பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பொருட்டிலான செலவுகளை ஏற்பதற்கும் அதேபோன்று அத்தியாவசிய அரசாங்க சேவைகளை தடையின்றி தொடர்ந்தும் பேணுவதற்கும் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 695 பில்லியன் ரூபா நிதி ஏற்பாட்டினை தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் "வரவுசெலவுத்திட்ட உதவிச் சேவை மற்றும் அவசர தேவை பொறுப்புக்கள்" என்னும் கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்துகொள்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |