2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - சட்டபூர்வமற்ற அந்நிய செலாவணி சந்தை நடவடிக்கைகள் விரிவடைவதை தடுக்கும் அத்துடன் சுங்க இசைவாக்கங்களின்போது இறக்குமதியின் பொருட்டு பெறுமதி குறைந்த பற்றுச்சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட சில கொடுப்பனவு முறைகளுக்கு வரையறைகளை அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, திறந்த கணக்கு கொடுப்பனவு முறை, பொருட்கள் விற்பனை செய்ததன் பின்னர் பணம் செலுத்தும் அடிப்படை, கொடுப்பனவின் மீது ஆவண கொடுப்பனவு முறை மற்றும் அங்கீகாரத்தின் மீது ஆவண கொடுப்பனவு முறை என்பனவற்றை வரையறுப்பதற்கு இயலுமாகும் வகையில் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் “2022 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகள் தொடர்பிலான கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை" விதித்து 2022‑05‑06 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட இத்தகைய ஒழுங்குவிதி வௌியிடப்பட்ட திகதியிலிருந்து ஒரு (01) மாத காலத்திற்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, 2022 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகள் தொடர்பிலான கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |