• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயனகூட உபகரணங்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் சிகிச்சை பொருட்கள் என்பன வழங்குவதற்காக விலை மனுக்களை முன்வைத்துள்ள வழங்குநர்களுக்கு கொடுப்பனவுகளைச் செய்தல்
- நாட்டில் நிலவும் பொருளாதார நிலமை காரணமாக அந்நிய செலாவணி விகிதாசாரத்தில் ஏற்படும் திடிர் அதிகரிப்புக்கு அமைவாக நாணயப் பத்திரங்களை திறந்துள்ள மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் திகதியன்றில் நிலவும் அந்நிய செலாவணி விகிதாசாரத்திற்கு அமைவாக கொடுப்பனவுகளை செய்வதற்கு 2022 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இரசாயனகூட உபகரணங்கள், நுகர்வு பொருட்கள் மற்றும் சிகிச்சை பொருட்கள் என்பன இறக்குமதி செய்வதற்காக நாணயப் பத்திரங்களை திறந்துள்ள வழங்குநர்கள் சார்பிலும் இதே வழிமுறையினை பின்பற்றி கொடுப்பனவுகளை செய்வதற்கும் ஏற்கனவே அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் விலை மனுக்கள் கோரப்பட்டு திறக்கப்பட்டுள்ள பெறுகைகள் அடங்கலாக ஏனைய உரிய வழங்குநர்களுக்கும் நாணயப் பத்திரங்களுக்குரிய கொடுப்பனவுகளை செய்யும் திகதியன்றில் நிலவும் அந்நிய செலாவணி விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவுகளைச் செய்வதற்கும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.