• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 - 2024 காலப் பகுதிக்கு உலக நிதியத்துடனான ஆரம்ப உடன்படிக்கை
- உலகளாவிய சுகாதார பிரச்சினையாக உருவாகியுள்ள எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்ற மூன்று (03) தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டில் "எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்றவற்றுடன் போராடுவதற்கான உலகளாவிய நிதியம்" தாபிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 114 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு 24 உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் சுகாதார அமைச்சு 15 உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதோடு, இலங்கை தேசிய சர்வோதய சங்கம், வெப்பமண்டல, சுற்றாடல்சார் நோய்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த தனியார் கம்பனி உட்பட இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் என்பன மீதி உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் 88.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதோடு, இதில் 2021 ஒக்றோபர் மாதம் 31 ஆம் திகதியன்று 71 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கொடையினை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக நிதியத்தினால் 2022 - 2024 காலப் பகுதி சார்பில் மேலும் 9.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இந்த கொடையினைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறியச் செய்விக்கப்பட்டதோடு, இதன் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.