2022-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொரிய குடியரசுக்கு ஊழியர்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை நீடித்தல் - தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொரிய குடியரசுக்கு ஊழியர்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இரு நாடு களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் 04 வருடங்களும் 10 மாதங்களும் கொண்ட காலப்பகுதிக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவதோடு, ஊழியர்களின் செயற்திறனை அடிப்படையாகக் கொண்டு, இந்த காலப்பகுதியை மேலும் நீடிப்பதற்கான சாத்தியம் நிலவுகின்றது. உரிய புரிந்துணர்வு உடன்படிக்கை யானது இரு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் மீதே மேலும் இரு வருட காலத்திற்கு அல்லது கொரிய குடியரசு உடன்பாடு தெரிவிக்கும் மேலும் ஒரு காலப்பகுதிக்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |