2022-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் உதவியின் கீழ் பெற்றோலிய உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு குறுகியகால கடன் பெற்றுக் கொள்தல் - நாட்டில் நிலவும் பொருளாதார நிலமையில் நாட்டிற்குத் தேவையான பெற்றோலிய உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் உதவியின் கீழ் 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட குறுகியகால கடன் வசதியினையும் இந்திய அரச வங்கியின் உதவியின் கீழ் மேலும் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வசதியினையும் வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தற்போது நிலவும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஈடுசெய்துகொண்டு தேவையான பெற்றோலிய உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் உதவியின் கீழ் மேலும் 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட குறுகியகால கடனைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |