• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை
- புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பொருட்டு சனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் த சில்வா அவர்களின் தலைமையில் சட்டத்துறை நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 2020‑09‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, இந்த குழுவின் ஆரம்ப அறிக்கையானது 2022‑04‑25 ஆம் திகதியன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

* மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் - (தலைவர்);

* மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள்,
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்;

* மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
கடற்றொழில் அமைச்சர்;

* மாண்புமிகு (மருத்துவர்) ரமேஷ் பத்திரன அவர்கள்,
கல்வி அமைச்சர்,
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்;

* மாண்புமிகு அலி சப்ரி அவர்கள்,
நிதி அமைச்சர்,
நீதி அமைச்சர்.