• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துரித முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல்
- தற்போது நாட்டில் எழுதுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வொன்றாக வௌிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு சாத்தியமுள்ள முதலீட்டு வாய்ப்புகளை துரிதமாக இனங்காணும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

* மாண்புமிகு (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள்,
வெகுசன ஊடக அமைச்சர் - (தலைவர்);

* மாண்புமிகு திலும் அமுணுகம அவர்கள்,
போக்குவரத்து அமைச்சர்,
கைத்தொழில் அமைச்சர்;

* மாண்புமிகு கஞ்சன விஜேசேக்கர அவர்கள்,
வலுசக்தி அமைச்சர்,
மின்சக்தி அமைச்சர்;

* மாண்புமிகு பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள்,
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்;

* மாண்புமிகு லொஹான் ரத்வத்த அவர்கள்,
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.