2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
துரித முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல் - தற்போது நாட்டில் எழுதுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வொன்றாக வௌிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு சாத்தியமுள்ள முதலீட்டு வாய்ப்புகளை துரிதமாக இனங்காணும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
* மாண்புமிகு (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள், வெகுசன ஊடக அமைச்சர் - (தலைவர்); * மாண்புமிகு திலும் அமுணுகம அவர்கள், போக்குவரத்து அமைச்சர், கைத்தொழில் அமைச்சர்; * மாண்புமிகு கஞ்சன விஜேசேக்கர அவர்கள், வலுசக்தி அமைச்சர், மின்சக்தி அமைச்சர்; * மாண்புமிகு பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்; * மாண்புமிகு லொஹான் ரத்வத்த அவர்கள், நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். |