• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- நாட்டில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியின மத்தியில் சமுர்த்தி, முதியோர், சிறுநீரக மற்றும் வலது குறைந்தோருக்கான படிகளைப் பெறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கடும் நெருக்கருக்கு ஆளாகியுள்ளமையினால் இந்த குடும்பங்களுக்கும் குறித்த இந்தப் படிகளை பெறும் பொருட்டு காத்திருப்பு பட்டியல்களிலுள்ள குடும்பங்களுக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. உலக வங்கி குழுமத்தின் நிதி வசதிகளின் கீழ் செயற்படுத்தப்படும் கருத்திட்டங்களில் எதிர்பாரா அவசர செயற்பாட்டு ஆக்கக்கூறுகளின் மூலம் இதன் பொருட்டுத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கு உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்படும் பயனாளி குடுமபங்களுக்கு மே மாதம் தொடக்கம் யூலை மாதம் வரை உரிய நிபாரணங்களை வழங்கும் பொருட்டு விசேட நிதி கொடுப்பனவொன்றை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பது சம்பந்தமாக நிதி அமைச்சரும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சரும் சமர்ப்பித்த பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.