• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் ஊடாக புறப்படும் பயணிகள் சார்பில் டிஜிட்டல் வழியொன்றை நடைமுறைப்படுத்துதல்
- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் கையாள்கைப் பணிகளை வினைத்திறமையுடன் விருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளைச் செய்வதற்கு விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ் சருவதேச விமான போக்குவரத்து சங்கத்தின் "அடையாள அட்டையொன்று" என்னும் தொனிப்பொருளின் மீது முதலாவது முனையத்தின் ஊடாக புறப்படும் பயணிகள் சார்பில் டிஜிட்டல் வழியினை அறிமுகப்படுத்தும், முன்னோடி கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, புறப்படும் முனையத்திற்கு உள்வரும் இடத்தில் டிஜிட்டல் கதவினை / முக பரிசோதனை இயந்திரத்தினைத் தாபித்து பயணிகளின் அடையாளம் சார்பில் செல்லுபடியாகும் டிஜிட்டல் அனுமதிப்பத்திரமொன்று கட்டுக்காப்பில் உள்ளதென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் இலகுவாக பயணிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும். சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பின் பிரகாரம் இதன் பொருட்டு முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.