2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் தங்கியிருக்கும் ரஸ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமின்றி விசா காலத்தினை நீடித்தல் - ரஸ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமை காரணமாக இலங்கையில் தங்கியிருக்கும் ரஸ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமின்றி இரண்டு (02) மாத காலங்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா விசா அனுமதிப்பத்திரத்தை நீடிப்பதற்கு 2022 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் நீடித்துள்ளமையினால் இலங்கையில் தங்கியிருக்கும் ரஸ்ய மற்றும் உக்ரேனிய நாட்டவர்களுக்கு மேலும் இந்நாட்டில் தங்கியிருப்பதற்கு இயலுமாகும் வகையில் அவர்களுடைய விசா காலத்தினை நீடிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |