• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது இருபதாவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தத்தினை தயாரித்தல்
- நாட்டில் நிலவும் சூழ்நிலையில் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைக் காண்பதற்காக அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நிலைபேறான தன்மையை உருவாக்கும் பொருட்டு அரசியலமைப்புக்கு பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவது ஏற்றதென அரசியல், தொழில்சார் மற்றும் சமூகத்தில் பல்வேறுபட்ட பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்து'ம் தரப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது :

* அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது இருபதாவது திருத்தங்களிலுள்ள சாதகமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சனநாயகத்தை மேலும் பலப்படுத்தி பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை கையளிக்கும் விதத்தில் அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு ஆரம்ப சட்டமூலமொன்றை துரிதமாக தயாரிப்பதற்கு சட்டவரைநருக்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்.

* மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்படும் ஆரம்ப சட்டமூலம் மற்றும் ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்டப்டுள்ள அரசியலமைப்பை திருத்துவதற்கான பிரேரிப்புகள் என்பன தொடர்பில் கலந்துரையாடி பொது உடன்பாட்டுடன் வரைவொன்றினை தயாரிக்கும் பொருட்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்தில் பிரேரிப்பொன்றை முன்வைப்பதற்கு மாண்புமிகு பிரதம அமைச்சருக்கு அதிகாரத்தினை கையளித்தல்.