2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்குதல் - இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் செயற்பாட்டிற்குப் பதிலாக புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு 2021 மார்ச் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த வழிமுறையின் கீழ் பின்வருமாறு நீண்டகால வதிவிட விசா வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* கூட்டாட்சி சொத்துக்களில் ஆகக்குறைந்தது 75,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்யும் வௌிநாட்டவர்களுக்கும் வௌிநாட்டு கம்பனிகளின் பணிப்பாளர்களுக்கும் அவர்களுடைய துணைவர்களுக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் இவ்வாறு முதலீடு செய்யப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர்களினை அடிப்படையாகக் கொண்டு ஐந்து (05) வருடங்கள் முதல் பத்து (10) வருடங்கள் வரை நீண்டகால வதிவிட விசா வழங்குதல். * இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் ஆகக்குறைந்தது 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்யும் வௌிநாட்டவர்களுக்கு பத்து (10) வருட காலப்பகுதிக்கு வதிவிட விசா வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் "தங்க சுவர்க்க பிராந்திய விசா நிகழ்ச்சித்திட்டம்" என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல். |