2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல் - 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அந்நிய செலாவணி சட்டம் அடங்கலாக தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களிலிருந்து விலக்களிப்பதற்கு அல்லது ஊக்குவிப்புகளை நிர்ணயித்து வழங்குவதற்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் தேவையான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகள் வௌியிடப்படும் வரை / பிரகடனப்படுத்தும் வரை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு அதிகார பிரதேசத்தில் முதலீடுகளுக்கான வசதிகளை செய்வதற்காக குறித்தொதுக்கப்பட்ட பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தி அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையான ஒழுங்குவிதிகளையும் கட்டளைகளையும் வௌியிடுமாறு இந்த ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய ஒழுங்குவிதிகளை வௌியிடுவதற்கும் இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |