2022-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கள் சார்பில் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல் - ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) கீழ் செயற்படும் "அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கான அமைப்பினால்" ஒழுங்கு செய்யப்படும் "அடிப்படை தொழில் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை" ஏற்ற ஆராய்ச்சி கருத்திட்டமாக கருதி ஆராய்ச்சி கொடைகளை வழங்கும் பொருட்டு ஐந்து (05) இலங்கை பெண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிணங்க உரிய கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த பெண் விஞ்ஞானிகள் சேவையாற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுனேஸ்கோ அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கும் குறித்த பெண் விஞ்ஞானிகளுக்கும் யுனேஸ்கோ அமைப்புக்கும் இடையில் நிதி கொடை உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |