• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- பரஸ்பர உடன்பாட்டின் மீது தெரிவு செய்யப்படும் இடங்களில் கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு உதவியினை நல்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலபிட்டிய மற்றும் ஏனைய பரஸ்பரம் உடன்படக்கூடிய இடங்களில் கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இந்திய அரசாங்கத்தின் உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.