2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் தனி டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல் - இலங்கையில் தனி டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கு இருதரப்பிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடு வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |