• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தை தாபித்தல்
- இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமொன்றைத் தாபிப்பதற்கு 6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க ஐக்கிய டொலர்கள் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நன்கொடைக்குரியதாக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் இந்த ஒருங்கிணைப்பு நிலையத்தை தாபிப்பது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் Barath Electronics கம்பனிக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.