2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கைமீட்கப்படமுடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின் மீது கைமீட்டல் சட்டத்தை திருத்துதல் - கைமீட்கப்படமுடியாத வகையில் தமது சொத்துக்களை நன்கொடையாக வழங்கும் நன்கொடையாளர்களை அவர்களுடைய சொத்துக்களிலிருந்து வௌியேற்றும் நன்கொடை பெற்றவர்கள் இருக்கும் சந்தர்ப்பத்திலும் மற்றும் நன்கொடை பெற்றவர்கள் மோசடியாக உரிய சொத்துக்களை மூன்றாம் தரப்பொன்றிற்கு உடைமை மாற்றும் சந்தர்ப்பத்திலும் சட்ட ரீதியிலான சலுகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து 2017 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கைமீட்கப்படமுடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின் மீது கைமீட்டல் சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |