• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இத்தாலி குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
- இலங்கை நீதிமன்றமொன்றில் குற்ற வாளியாக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிடப்படும் திட்டவட்டமாக வேறு நாடொன்றின் பிரசையொருவருக்கு குறித்த தண்டனையை பிரசையானவர் குடியுரிமை பெற்றுள்ள நாட்டிலேயே அனுபவிப்பதற்கு இயலுமாகும் வகையில் உரிய நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேறு நாடொன்றில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரை எமது நாட்டினால் பொறுப்பேற்பதற்கு இயலுமான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் உள்ளது. இவ்வாறு செயலாற்றுவதற்கு இருதரப்புக்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்து கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க தண்டனை விதிக்கப்பட்ட ஆட்களை ஒப்படைப்பதற்கும் பொறுப்பேற்பதற்கும் உரியதாக இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தாலி அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை யொன்றினை கைச்சாத்திடும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.